Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Thursday, November 27, 2008

என்னுடைய குளியல் அறை கதை

என்னுடைய குளியல் அறை கதை
நான் இன்று குளியல் அறை கதவு திறக்க முடியவில்லை
அதனால் நான் அதை .... நிங்களே பார்க்கவும் ...





















Thursday, August 28, 2008

பதினெட்டு சித்தர்கள் கோவில்

பதினெட்டு சித்தர்கள் கோவில்

Siddars
சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தை உடையவர் என்றும் பொருள்.

சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர்.

இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம். சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன.

அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே.

அதே போன்று இன்று உலக மக்கள் திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கும் அந்த ஸ்தலம் உலக பிரசித்தி பெற்றதற்கும் காரணம் அங்குள்ள கொங்கணவர் என்ற சித்தரே.

அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.

அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ

திருமூலர் - சிதம்பரம்

இராமதேவர் - அழகர்மலை

அகஸ்தியர் - திருவனந்தபுரம்

கொங்கணர் - திருப்பதி

கமலமுனி - திருவாரூர்

சட்டமுனி - திருவரங்கம்

கரூவூரார் - கரூர்

சுந்தரனார் - மதுரை

வான்மீகர் - எட்டிக்குடி

நந்திதேவர் - காசி

பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்

போகர் - பழனி

மச்சமுனி - திருப்பரங்குன்றம்

பதஞ்சலி - இராமேஸ்வரம்

தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்

கோரக்கர் - பொய்யூர்

குதம்பை சித்தர் - மாயவரம்

இடைக்காடர் - திருவண்ணாமலை

சக்தி மிகுந்த சித்தர்களை வணங்கி அருள் பெறுக. நலம் பெறுக.

Tuesday, August 19, 2008

28 இணைய தளம் நீங்கள் எழுத பணம் தருவர்கள்

நீங்கள் எழுதுவதற்கு பணம் கிடைத்தால் எப்படி இருக்கும்?

கிழே நான் எனக்கு கிடைத்த இணைய தளம் தந்து உள்ளன் .


  1. 451 Press

  2. Be A Guide (About.com)



  3. BlogBurner




  4. Blog Feast


  5. Bloggerwave

    bloggerwave


  6. Blogitive

    blogitive


  7. Blogsvertise

    blogsvertise


  8. Blog To Profit

    blogtoprofit



  9. BOTW Media

    botw media


  10. CreamAid

    creamaid


  11. Creative Weblogging

    creative blogging


  12. DayTipper

    daytipper


  13. Dewitts Media

    dewitts media


  14. Digital Journal

    digital journal


  15. Helium

    helium


  16. In Blog Ads

    in blog ads


  17. Link Post of Link Worth

    loudlaunch


  18. LoudLaunch

    loudlaunch


  19. Pay Me To Blog About You

    pay me to blog about you


  20. PayPerPost

    payperpost


  21. Review Me

    review me


  22. Shvoong

    review me


  23. Smorty

    smorty


  24. Sponsored Reviews

    sponsored reviews


  25. Squidoo

    squidoo


  26. Weblogs Inc

    weblog inc


  27. Wise Bread

    weblog inc


  28. b5media

    weblog inc


20 இணையதளம் இலவச புத்தகம் பதிவு இறக்கம் செய்ய

நமக்கு இலவசமாக புத்தகம் பதிவு இறக்கம் செய்து படிக்கலாம்.
கிழே நான் இணையதளம் செல்ல வழி தந்து உள்ளன் .
  1. FreeBookSpot

  2. 4eBooks

  3. Free-eBooks

  4. ManyBooks

  5. GetFreeEBooks

  6. FreeComputerBooks

  7. FreeTechBooks

  8. Scribd

  9. Globusz

  10. KnowFree

  11. OnlineFreeEBooks

  12. MemoWare

  13. BluePortal

  14. OnlineComputerBooks

  15. SnipFiles

  16. BookYards

  17. The Online Books Page

  18. AskSam Ebooks

  19. Baen Free Library

  20. eBookLobby

மறு மொழி எதிர்பார்த்து

Thursday, August 14, 2008

காலில் விழுந்த எம்.ஜி.ஆர்..!

காலில் விழுந்த எம்.ஜி.ஆர்..!

நன்றி:- http://moganan.blogspot.com/2008/08/blog-post_8075.html
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காலில் நிறைய பேர் விழுந்து வாழ்த்து பெற்றதை நாடறியும். ஆனால் எம்.ஜி.ஆர், இரண்டு பேரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றது உங்களுக்குத் தெரியுமா..?

தமிழ்த் திரையுலக வரலாற்றிலும் சரி, அரசியல் வரலாற்றிலும் சரி... தான் உயிருடன் உள்ளவரை மன்னாதி மன்னனாக இருந்தவர் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். (என்றழைக்கப்படுகின்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திர மேனன். இவர் போன்ற பிரபலங்களின் முழுப்பெயர்களை அறிய இங்கே சொடுக்கவும்).

தன்னைப் பெற்ற தாயான சத்யபாமா அவர்களை தெய்வமாக போற்றியவர், அவர் இருக்கும் வரை அவரது தாயாரின் காலில் வணங்கிவிட்டுத்தான் (முக்கிய இடங்களுக்கும் சரி, முக்கியமான பணிகளுக்கும் சரி) செல்வார்.

1977-ல் தமிழ அரசின் ஆட்சிக் கட்டிலைப் பிடித்த எம்.ஜி.,அவர் இறந்த ஆண்டான 1987 வரை மன்னாதி மன்னனாக விளங்கினார். அப்போது அவர் காலில் விழாதவர்களே யாரும் இல்லை. (அதன் நீட்சிதான் இன்று ஜெயலலிதா அம்மையாரின் கால்களில் இன்றைய ரத்தத்தின் ரத்தங்கள் விழுவது என்பது வேறு விடயம்...) அதற்கு அவரது வயதும் ஒரு காரணம் என்றாலும், விசுவாசம் என்பது அதிகம் பொருத்தமாக இருக்கும்.

அச்சிறப்பு வாய்ந்த எம்.ஜி.ஆர், பிரபல நடிகராக, அரசியல் தலைவராக இருந்தபோது, அவரது தாயைத் தவிர வேறு இருவரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றார் என்றால் நம்ப முடிகிறதா. அதுவும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள், மக்கள்கள் திரண்டிருந்த திடலில், பலபேர் முன்னிலையில் விழுந்தார் என்பதை நம்ப முடிகிறதா...


நம்புங்கள்... வரலாறு காட்டும் உண்மை இது.



எம்.கே.ராதா காலில் விழுந்து வணங்கும் எம்.ஜி.ஆர்


1936 ல் சதிலீலாவதி என்ற படத்தில் எம்.ஜி.ஆர் முதன் முதலாக அறிமுகமானார். இப்படத்தில் அவருக்கு சிறுவேடம்தான் என்றாலும், தமிழ் சினிமா என்ற மிகப்பெரிய ஊடகத்திற்கு எம்.ஜி.ஆர் வைத்த முதல் அடி இதுவாகும். இதனை எல்லீஸ் டங்கன் இயக்கினார். இப்படத்தில் நடித்த எம்.கே.ராதா என்பவர்தான், எம்.ஜி.ஆருக்கு நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தார்.


1971-ல் வெளி வந்த 'ரிக்ஷாக்காரன்' படத்திற்கு இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழா மேடையில் எம்.ஜி.ஆரை திரையுலகிற்கு அறிமுகப் படுத்திய எம்.கே.ராதா வந்து வாழ்த்தினார். அம்மேடையிலேயே அவரது காலில் விழுந்து வணங்கினார். மற்றொருவார், சினிமா உலகிற்கு அடியெடுத்து வைக்க காரணமாயிருந்த இயக்குனர் சாந்தாராம் அவர்கள்.

(இப்புகைப்படத்தை எடுத்தவர் பிரபல புகைப்பட நிபுணர். 'சுபா' சுந்தரம் அவர்கள். அவர் தற்போது உயிருடன் இல்லை. அவரை நான் ஜூலை, 2003-ல் நான் பணியாற்றிய பத்திரிகைக்காக நேர்காணல் கண்டேன். அப்போது அவர் சொன்ன தகவல் இது. அவர் எனக்களித்த புகைப்படம்தான் இது.)

Monday, August 11, 2008

நடிகர்களின் சம்பள பட்டியல் : முழு விவரம்

நன்றி :- http://nirubar.blogspot.com/2008/08/blog-post_3958.html
நிருபர் வலைப்பூவில் ஏற்கனவே நடிகைகளின் சம்பள பட்டியலை வெளியிட்டிருந்தோம். நடிகைகளில் நயன்தாரா, த்ரிஷாவைத் தவிர மற்ற நடிகைகள் அனைவரும் லட்சங்களில்தான் சம்பளம் வாங்குகிறார்கள். நடிகர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ உங்களுக்காக நடிகர்களின் சம்பள பட்டியல் முழு விவரம்:-

ரஜினிகாந்த் - ரூ.25 முதல் ரூ.40 கோடி வரை
கமல்ஹாசன் - ரூ.10 கோடி
விஜயகாந்த் - ரூ.4 கோடி
சரத்குமார் - ரூ.2 கோடி
அஜித்குமார் - ரூ.10 கோடி
விஜய் - ரூ.8 கோடி
விக்ரம் - ரூ.6 கோடி
விஷால் - ரூ.6 கோடி
சூர்யா - ரூ.6 கோடி
சிம்பு - ரூ. 4 கோடி
தனுஷ் - ரூ.4 கோடி
ஆர்யா - ரூ.3 கோடி
கார்த்தி - ரூ.3 கோடி
ஜெயம் ரவி - ரூ.3 கோடி
மாதவன் - ரூ.1.5 கோடி
சத்யராஜ் - ரூ.75 லட்சம்
பிரசாந்த் - ரூ.50 லட்சம்
பசுபதி - ரூ.30 லட்சம்

மற்ற நடிகர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார்கள்.

வாய் வலிக்க சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்கள் சம்பளம் வாயை பிளக்க வைக்கிறது. அவர்களின் சம்பள விவரம் அடுத்த இரு தினங்களில் நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள்)

http://manggai.blogspot.com/2008/08/blog-post_11.html (nandri)

பிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள்)

தாய்மை எந்த ரூபத்திலும் எந்த வயதிலும் வரலாம் என்பதற்கு இதோ கீழே இருக்கும் ஒரு கலந்துறையாடலே சான்று.

தன்னலம் அற்ற தூய மனதுடன், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தன் பணியை மனதார முழு அற்பணிப்போடு செய்யும் ஒரு குழந்தை வடிவத்தில் தெய்வம் .

கொஞ்சம் பெரிய பதிவு...சிரமம் பார்க்காமல் தயவு செய்து முழுவதும் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு தாய் மரணப்படுக்கையில்.. அவரைப் பார்த்துக் கொள்வது அவருடைய பத்து வயது மகள்.


சம்பந்தப் பட்ட குழந்தையின் நலன் கருதி, பெயரோ, அடையாளமோ கொடுக்கப்படவில்லை.


எத்தன நாளா அம்மா இப்படி இருக்காங்க?
ஒரு வருஷமா அம்மாக்கு உடம்பு சரியில்லை. அவங்க ஒரு ஹோட்டல்ல வேலை செய்துட்டு இருந்தாங்க. அங்க யாருடனோ ஏற்பட்ட தொடர்பால் தங்கச்சி பாப்பா பிறந்தா. அப்ப இருந்து அம்மாக்கு உடம்பு சரியில்லை. அம்மாக்கு எய்ட்ஸ் வியாதின்னு சொன்னாங்க. அம்மா ரொம்ப நாளா எங்க கிட்ட சொல்லலை...லேட்டா தான் வெளியே சொன்னாங்க.. முதல்ல எல்லாம் ரொம்ப அழுவேன். இப்ப எனக்கு தைரியம் வந்துடுச்சு. சொந்தக்காரர் ஒருத்தர் தைரியமா இருக்க சொன்னதுனால அம்மாவ நல்லா பார்த்துக்குறேன்.

அம்மாக்கு என்ன எல்லாம் நீ செய்வே.. எப்படி பார்த்துப்பே?
அம்மா உடம்ப தொடச்சி விடனும். வாயில் நீர் வழிஞ்சுட்டே இருக்கும். அதை தொடர்ந்து தொடைக்கனும். துணி மாத்தி விடனும். தினமும் படுக்கை மாற்றனும். பவுடர் போடனும். அவங்க டாய்லெட் போனா கழுவி விடனும்.

உனக்கு இது எல்லாம் செய்ய கஷ்டமா இல்லையா?
( நம் கண்களுக்குள் ஊடுறுவிப் பார்த்துட்டு)

என் அம்மாதானே, நான் தானே செய்யனும்...

அம்மாவ மட்டும் இல்லை.... தங்கச்சி பாப்பாவையும் நான் தான் பார்த்துப்பேன். அவ ரொம்ப குறும்பு ( சிரித்துக் கொண்டே).. சில சமயம் அம்மாவ கவனிச்சுட்டு இருக்கும் போது அவளை கவனிக்கலைன்னு அழுவா... கோவம் வந்துடும் அவளுக்கு..(ஹா ஹா என்று சிரிப்பு)

அப்பா?

அவர் எங்கள் விட்டுட்டு போய் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டார்

அம்மா இப்படி பண்ணிட்டாங்களேன்னு உனக்கு கோவம் வந்திருக்கா?
இல்லை..ஆனா ரொம்ப வருத்தமா இருக்கு... அம்மாவ முழுவதும் குணப்படுத்த முடியலைன்னு.. எத்தன நாளைக்கு அம்மா இப்படியே இருப்பாங்கன்னு தெரியலையே..ஆனா அம்மா தான் எனக்கு விஷம் குடு விஷம் குடுன்னு கேட்டுட்டே இருப்பாங்க....நான் எப்படி குடுப்பேன்..நான் அம்மாவ நல்லா பார்த்துப்பேன்.

பேசிக்கொண்டு இருக்கும் போதே தங்கச்சிப்பாப்பா துறு துறு என்று இவள் பக்கம் தவழ்ந்து வர..அவளை அள்ளிக் கொள்கிறாள்..

குட்டிப்பாப்பாவ தூக்கனும், பார்த்துக்கனும், அதுனால உனக்கு களைப்பா இல்லையா?

(சிரித்துக்கொண்டே வெகுளியாக)..
கைவலிச்சா அவள அடுத்த கைக்கு மாத்திக்குவேன்.. ஆனா அவ ரொம்ப சேட்டை..பாருங்க என் முடிய பிடிச்சு இழுக்கறா. என் கண்ணத்தை கிள்ளி வச்சுட்டே இருப்பா..நேத்து என்னை பளார்னு அறஞ்சுட்டா.. ஆனா குட்டிப்பாப்பாதானே அவளுக்கு தெரியாதில்ல.. ரொம்ப குறும்பு பண்ணா, " பேசாம இரு..இல்லன்னா பேச மாட்டேன்னு சொல்லுவேனா..அப்புறம் சிரிப்பா..பேசாம இருப்பா". (குழந்தைக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே)

பாப்பாவ கீழ போட்டற மாட்டியே..?..நல்லா பிடிச்சுக்கோ
அதெல்லாம் போடமாட்டேன்..கெட்டியா பிடிச்சுப்பேன்..இப்படி (கெட்டியாக நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறாள்).

(குட்டிப்பாப்பா இந்த பத்து வயது சிறுமியை அம்மா என்று தான் அழைக்கிறாள்).

குட்டிப்பாப்பா உன்னை அம்மான்னு கூப்பிடறாளே?.. உங்க வீட்ல உங்க அம்மா, பாட்டி எல்லாம் இருக்காங்க..அவங்களையும் அம்மான்னு தான் கூப்பிடுவாளா?
இல்லை...என்னை மட்டும் தான் அம்மான்னு கூப்பிடிவா...ஏன்னு தெரியலை.. ஆனா அவ அப்படி கூப்பிடும் போது எனக்கு நல்லா இருக்கும் ... என்னை மட்டும் தான் அப்படி கூப்பிடுவா என் குட்டி (என்று மீண்டும் பாப்பாவுக்கு முத்தம் கொடுக்கிறாள்)

நீ ஸ்கூலுக்கு போறதில்லையா?
நான் ஸ்கூலுக்கு போனா அம்மாவையும், குட்டிப் பாப்பாவையும் யாரு பார்த்துப்பா?

தங்கச்சி பாப்பாவ யாராவது எடுத்து வளர்க்க முன் வந்தா நீ சரி சொல்லுவியா?
அவ நல்லா படிக்கனும்.. எனக்கு அவள நல்லா பார்த்துக்கனும்னு ஆசை.. ஆனா நான் என்ன வேலை பார்க்குறதுன்னு தெரியலை... அவ வசதியான இடத்துக்கு போனா சந்தோஷம் தான்.. ஆனா நான் எப்படி அவள விட்டுட்டு இருப்பேன்...(மிகுந்த சோகத்துடன்)

உனக்கு எய்ட்ஸ் பத்தி என்ன தெரியும்?
(கைகள் இரண்டையும் இருக்கமாக கட்டிக் கொண்டு)

ஐயோ யாருக்கும் அது வரக்கூடாது.

எய்ட்ஸ் எப்படி வருதுன்னு உனக்கு தெரியுமா?
ஆணுரை உபயோகிச்சா வராதாம்.

உனக்கு யாரு சொன்னா ?
ஒரு விளம்பரத்துல படிச்சேன்.. எச்ஐவி ல் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள ஆணுரை உபயோகிங்கள் என்று. (ம்ம்ம்.. என்ன சொல்ல)

அம்மா மாதிரி எச்ஐவியால பாதிக்கப்பட்டவங்க கிட்ட நீ என்ன சொல்லுவே?
அம்மா மாதிரி லேட்டா சொன்னா, என் மாதிரி குழந்தைங்க என்ன பண்ணுவாங்க...அதுனால தெரிஞ்ச உடனே டாக்டர் கிட்ட போனா கஷ்டப்பட வேண்டியது இல்லை...லேட்டா சொல்லி அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நம்மளால தாங்க முடியுமா?..வீட்ல இருக்குறவுங்களும் அவங்கள நல்லா பார்த்துக்கனும் ( இதை விட ஒரு சிறந்த விழிப்புணர்வு செய்தி இருக்க முடியுமா..ம்ம்ம்)

நீ ஏதாவது கேட்க விரும்பறியா?
அம்மாக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் எங்க இருப்பேன்?...என்ன பண்ண? ( மனதை பிழியவில்லை?..ம்ம்ம்)

நீ எங்க போக விரும்பறே?
தெரியலை....என்ன என்னமோ சொல்றாங்க... தனியா இருந்தா யாராவது தப்பா நடந்துப்பாங்களாம்...கடத்திட்டுப் போய் வித்துடுவாங்களாம்...ரேப் பண்ணிடுவாங்களாம். (கடவுளே!!!)

நீ சாமிய பார்த்தா என்ன கேட்பே?
எல்லாரும் எந்த நோயும் இல்லாம ஆரோக்கியமா இருக்கனும்.

உனக்காக ஒன்னும் கேட்க மாட்டியா?
கண்டிப்பா கேட்பேன்..என் அம்மாக்கு சீக்கிறம் நல்லாகனும்.. குட்டிப்பாப்பா நல்லா இருக்கனும்...( சுயநலம் இல்லாத இந்த அன்பான மனதை வணங்கத் தோன்றுகிறதல்லவா?ம்ம்)

தற்பொழுது அம்மா மருத்துவமனையில்..
அம்மாவ பார்க்க போறியா? ..
நான் கூப்டுட்டு போறேன்..
அம்மாவ பார்க்கனும் போல இருக்கு.. ஆனா நான் போன அப்புறம் ஏதாவது.......................................... (குட்டிப்பாப்பாவை அனைத்துக் கொண்டு அழுகிறாள்..)

இது போல எத்தனையோ குழந்தைகள் படித்து, விளையாடி மகிழ வேண்டிய வயதில் குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.


இயலாமையை நினைத்து நினைத்துத் துவண்டு விடுகிறது என் மனம்.


எத்தனையோ திட்டங்கள், கோடி கோடியாய் பணம் எச்ஐவி தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இத்திட்டங்களினால் பயன் அடைந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்களின் எண்ணிகையை விட திட்டம் தீட்டுபவர்களுக்கும், அதை செயல் படுத்துவர்களுக்கும் செலவு செய்யும் பணம் அதைவிட அதிகம்.


மறுபடியும் மறுபடியும் மரணத்தைப் பார்க்கும்போது வேதனையின் கடுமை குறைவதைப்போல, சுடுகாட்டில் பிணத்தை எரிப்பவருக்கு எல்லாமே பழகிப் போவதைப் போலத்தான் இந்தச் சிறுமியின் கதையும். அதிகாரிகளுக்கு இது மற்றொரு 'கேஸ்'.


இந்தப் பதிவினை எழுதி முடித்த அடுத்த நாள் என் தோழி ஒருத்தி கோவையில் இருந்து தொலைபேசினாள். ஒரே பெண்...நல்ல வசதியான குடும்பம்...அந்த உறையாடலையும் படியுங்கள்.


நான் - ரொம்ப நாளா பேச முடியலை .. எப்படி இருக்கே?


தோழி- நல்லா இருக்கேன்...நானும் கட்டட வேலைய பார்த்துகறதுனால பேச முடியலை.


நான் - ஓ மறுபடியும் வீடு கட்டறியா?


தோழி- இல்லை.... அப்பா படுத்த படுக்கை ஆகிட்டார். எல்லாமே பெட்ல தான். வீட்டுக்குள்ள ஸ்மெல் வருது. இன்பெக்ஷன் ஆயிட்டா என்ன பண்ண. அதுனால தான் ஒரு அவுட் ஹவுஸ் கட்டினேன். அப்பா அங்க தான் இருக்கார்.


பெரிய வீடு, நான்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தி தந்தையை பார்த்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு வசதி...அவர் சேர்த்த சொத்துதானே.... இயற்கையாக இருக்க வேண்டிய பாசமும், கடமை உணர்வும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது. எந்த சூழ்நிலை மனிதர்களை இப்படி மாற்றுகிறது? நடைமுறைக்கு ஒத்துவராத உணர்வுகளா இவை..?...என்னால் அப்படி நினைக்க முடியவில்லை.


நாம் செய்யும் செயல்களுக்கு மனதிற்குள்ளேயே நியாயம் கற்பித்து நம்மையே சமாதானம் செய்து கொள்வதை தவிர நாம் வேறு என்ன செய்கிறோம்.


இந்தக் குழந்தை நீடுழி வாழ வாழத்தி வணங்குவோம்

முஸ்லிம்களை பாதுகாக்கும் ஜம்மு இந்துக்கள்

முஸ்லிம்களை பாதுகாக்கும் ஜம்மு இந்துக்கள்
http://dinamalar.in/pothunewsdetail.asp?News_id=5223&cls=row4&ncat=IN

ஜம்மு: அமர்நாத் கோவில் நிலம் பிரச்னையால், காஷ்மீரில் தொடர்ந்து கலவரமும், வன்முறையும் நீடித்து வரும் நிலையில், ஜம்முவில் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம்களுக்கு, காஷ்மீரத்து இந்துக் களே பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். சம்பா மற்றும் அக்னூர் பகுதிகளில் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் முஸ்லிம்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், முஸ்லிம்களுக்கு காஷ்மீரத்து இந்துக்களே பாதுகாப்பு அளிப்பது பல்வேறு இடங்களில் காணப் படுகிறது.


டலாப் டல்லியோ நகரில் இரு தெருக்களில் 15க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்துக்களே பாதுகாப்பு அளிக்கின்றனர். இரவு நேரங்களில், இந்துக்கள் ரோந்து சென்று, பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். "இங்கு தனியே வசிக்கும் காஷ்மீர் பெண் கூட, தான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்' என்று பெருமிதத்துடன் கூறினார்



நிட்கோ தெருவில் வசிக்கும் அனில் புதியா. இன்னொரு தெருவில் வசிக்கும் அருண் அகர்வால் என்பவர், "மதவெறியர்களை, முஸ்லிம்களை தொடக்கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் இங்கு சகோதரத்துவத்துடன் வசித்து வருகிறோம். எங்களில் யாரையும் புண்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று கூறினார். இல்லத்தரசியாக இருக்கும் சகுந்தலா தேவி என்பவர், முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்து பெரிதும் கவலைப்படுகிறார்.



""முஸ்லிம் குடும்பத்தினர் வேறு இடங்களுக்கு குடிபெயர முடிவு செய்தனர். இத்தனை நாளாக ஒன்றாக இருந்த அவர்கள் வேறு இடத்துக்கு போவதை நாங்கள் விரும்பவில்லை. அவர்களை சமாதானப்படுத்தி, தொடர்ந்து இங்கேயே வசிக்க செய்துள்ளோம்'' என்று கூறினார் சகுந்தலா தேவி.


அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் அப்துல் ரூப் லோன் என்பவர், ""உண்மைதான். இங்கு 17 முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே உள்ளோம். எங்கள் பாதுகாப்பு குறித்து நாங்கள் அச்சப்பட்டோம். சில குடும்பத்தினர், பாதுகாப்பான இடத்துக்கு குடிபெயர நினைத்தனர். அவர்களை பக்கத்துவீட்டு இந்துக்கள் சமாதானப்படுத்தி விட்டனர்'' என்று கூறினார். டலாப் டல்லியோவில் வசிக்கும் அப்துல் ரகிம் மாலிக் என்பவர், ""இந்த பகுதியில் பா.ஜ., மிகுந்த பலத்துடன் இருக்கிறது. இரவு நேரங்களில் மத்தளம் முழங்க அவர்கள் அணி வகுத்துச் செல்வர்.



ஆனால், முஸ்லிம்கள் மீது இதுவரை சிறிய தாக்குதல் கூட நடந்தது இல்லை'' என்று கூறினார். ஜம்மு முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவராக உள்ள அப்துல் மஜித், ""இந்த பிரச்னையில் மற்ற கட்சிகளை விட பா.ஜ.,வுக்கு தான் முக்கிய பங்கு உள்ளது. சரியான எண்ணம் கொண்டவர்களை அவர்கள் அரவணைத்து செல்லவேண்டும். முஸ்லிம்கள் மீது விரோதம் கொண்ட சிலரால் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்'' என்று கூறினார்.

Friday, August 8, 2008

உலகம் அழிந்து கொண்டு வருகிறது

உலகம் அழிந்து கொண்டு வருகிறது

நன்றி:- http://girirajnet.blogspot.com/2008/08/blog-post_08.html

ஒரு வாரமா எல்லோரும் குசேலன் படம் நல்லா இருக்கு குசேலன் குப்பை குசேலன் படம் நாசமாக போகனும்னு பேசிட்டு இருக்கோம் ..ஆனா அதை விட முக்கியமா நாம் செய்யும் சுற்று புற சீர்கேட்டால் நம் உலகமே அழிந்து கொண்டு வருகிறது, அதை பற்றி யாரும் கவலை பட்ட மாதிரி தெரியல.

உலகம் முழுவதும் சுற்றுப்புற சீர்கேட்டால் வெப்பத்தின் அளவு அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் பருவ நிலை மாற்றங்கள் ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு பஞ்சம் பனி உருகுதல் கடல் நீரின் அளவு மிக வேகமாக அதிகரித்தல், பல புதிய நோய்கள், என்று அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.

வெப்பமே பார்த்திராத நாடுகள் கூட தற்போது வெப்பத்தை பார்த்து பயந்து போய் உள்ளன. மின்சிறி என்ற ஒன்றை பயன்படுத்தி இருக்காத நாடுகள் எல்லாம் அதை பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டன.

இந்நிலைக்கு காரணம் காடுகள் அழிப்பு, எந்த காலத்திலும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, தொழிற்சாலைகள் வெளியிடும் சுத்திகரிக்காத கழிவுகள், குண்டு பல்புகள், இவை தவிர பல காரணங்கள், இவை நம் அன்றாட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவை.

நம்மால் முடிந்த அளவு இதற்க்கு துணை போகாமல் இருக்கலாம், முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கலாம், குண்டு பல்பு அதிக வெப்பத்தை உண்டு பண்ணுகிறது அதை பயன்படுத்துவதை தவிர்க்கலாம், தங்களது வீடுகளில் முடிந்தவர்கள் மரம் வளர்க்கலாம், மின்சார பயன்பாடு இல்லாத போது அதை எரிய விட்டு கொண்டு இருப்பதை நிறுத்தலாம். இவை எல்லாம் நம்மால் முடிய கூடிய எளிதான உதவிகளே.

இன்று இரவு (8-8-08) 8 மணிக்கு இதை மக்களிடைய இதன் தாக்கத்தை உணர செய்ய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த எக்ஸ்னோரா அமைப்பு அனைவரையும் 8 நிமிடம் அனைத்து மின்சார விளக்குகளையும் அனைத்து இதற்க்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. (இதை பயன்படுத்தி எவனும் திருடிட்டு போகாம இருந்தா சரி)

நம் தமிழக அரசு பாதி நேரம் மின்சாரமே தருவதில்லை, இவர்கள் உலக மக்கள் மீது ரொம்ப அன்பு வைத்து ரொம்ப தீவிரமா கடை பிடிக்கறாங்க போல, சரி அதை விடுங்க. அது தான் அவர்களே பாதி நேரம் மின்சாரத்தை நிறுத்தி விடுகிறார்களே நாம் 8 நிமிடம் நிறுத்தி புதுசா என்ன செய்ய போகிறோம் என்று கேட்க வேண்டாம், இதனால் நாம் பெரிய உதவி செய்துவிட போவதில்லை, இது முக்கியமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்ய சொல்கிறார்கள், மற்றபடி வேறு எந்த விசயமும் இல்லை. எனென்றால் பாதி பேருக்கு வருஷா வருஷம் வெய்யில் அதிகமாகிட்டே வருகிறதே அப்படிங்கற அளவுல தான் தெரியும் ஆனால் அது எதனால் அதிகம் ஆகிறது என்று தெரியாது. அதனால் விதண்டா வாதம் பேசாமல் உலக சுற்றுப்புற சூழலில் பங்கெடுத்து கொள்ளுங்கள்.

நேற்று பல பதிவர்களின் பதிவுகளில் சென்று இது பற்றி பின்னூட்டம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்த கோவை விஜய்க்கு என் வாழ்த்துக்கள்.

How to Get files from the directory - One more method

 import os import openpyxl # Specify the target folder folder_path = "C:/Your/Target/Folder"  # Replace with the actual path # Cre...