Monday, September 18, 2017

ஸ்ரீ இராம நாம மந்திர மகிமை

ஸ்ரீ இராம நாம மந்திர மகிமை 🌷
1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் 'ராம நாமத்தை இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும்.
2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ' என்றே நடக்கவேண்டும் .
3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜெபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல ராம நாமாவில் கரைய கரைய தூக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.
4. ' ராம நாம' ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே ' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.
5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்.' எழுந்து கடமைகளை செய்யும்போதும் சொல்லவேண்டியதும் 'ராம நாமம்.' அந்த நாள் நமக்கு 'ராம நாம' நாளாக இருக்கவேண்டும்.
6. ' ராம நாம ' ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்,
7. எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமா' சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லிசாப்பிடலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே!
8. 'ராம நாமா' எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் 'ராம நாமா' சொல்ல மனம் மட்டும் போதும்.
இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள் .
9. ஒரு வீட்டில் உள்ள பெண் 'ராம நாமா' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில் தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும் .
10. எல்லாவித சாஸ்திர அறிவும் 'ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் 'ராம நாமா' சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு .
11. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது 'ராம நாம ஜெபத்தால் பெற முடியும். 'ராம நாமாவினால் வினைகள் எரிந்து, எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும்.
12. நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ செல்லும்போதும் 'ராம நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.
காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது ( சப்தரிஷி பூஜையின் போது ) ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.
13. பெண்களின் இயற்கை உபாதை நாட்களிலும் 'ராம நாமா' சொல்லுவதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம்.'ராம நாமா' சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
பெண்கள் சமைக்கும்பொழுது ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே ராம பிரசாதமாகி ......அதை உண்பவருக்கு தூய குணங்களையும் , நோயற்ற தன்மையையும் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள் இருப்பின் குணமாகும்.
14. வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக இருந்தால், சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் 'ராம நாமா' வை ஒரு முறை சொல்லமுடியும்.
15. 'ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில்
ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும்.
சுற்றியுள்ள மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள் எல்லாம் 'ராம நாமா' கேட்டு கேட்டு ..... அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம். இதுவும் சேவையே! ..... யார் அறிவர்? நமது முந்தய பிறவிகளில் நாமும் 'ராம நாமா' கேட்டு கேட்டு இப்போதைய பிறவியினை பெற ஏதேனும் ஒரு பக்தரின் வீட்டருகில் மரமாய், ..செடியாய் ...பறவையாய் ....விலங்காய் இருந்தோமோ ! என்னவோ ........ அப்புண்ணிய பலனை ..... ராமனே அறிவான்.
'


Monday, June 19, 2017

க்ரீன் பீஸ் மசாலா - Green peas Masala

*க்ரீன் பீஸ் மசாலா*


    பச்சைப்பட்டாணி - 250 கிராம்
    (அல்லது) காய்ந்த பட்டாணி - 150 கிராம்
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 2 அல்லது 3
    உருளைக்கிழங்கு - ஒன்று
    சீரகம் - அரை தேக்கரண்டி
    ஏலக்காய் - ஒன்று
    கிராம்பு - 2
    இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
    சிவப்பு மிளகாய்த்தூள் - 1 அல்லது 1.5 தேக்கரண்டி
    கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
    எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
    பச்சை கொத்தமல்லித்தழை - 2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
    உப்பு - சுவைக்கேற்ப



தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கை சிறு சதுரங்களாக நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளியை சிறு சதுரங்களாக நறுக்கி மிக்ஸியில் நறுக்கின வெங்காயம், தக்காளி, ஏலக்காய், கிராம்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு வெடிக்க விடவும்.

அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம் விழுதை ஊற்றவும்.

பின்னர் இஞ்சி விழுது சேர்க்கவும். தீயை மெதுவாக வைத்து கிளறி விடவும்.

சிறிது கொதித்ததும் பட்டாணி மற்றும் நறுக்கின உருளைக்கிழங்கு சேர்க்கவும்.

பின்னர் சிவப்பு மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

குக்கரை மூடி, வெயிட் போட்டு 2 அல்லது 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். குக்கர் சூடு தணிந்ததும் திறந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பரிமாறும் பாத்திரத்தில் மாற்றவும். பொடியாக நறுக்கின கொத்தமல்லியை மேலே தூவி அலங்கரிக்கவும். சப்பாத்தி, பூரி, நாண் போன்ற வகைகளுக்கு சூப்பர் சைடு டிஷ்.



Wednesday, May 10, 2017

நாங்க ஒன்னும் முட்டாள் அல்ல

*நாங்க ஒன்னும் முட்டாள் அல்ல*
********************************************************
*1. நாங்க பாக்குற மரத்திலெல்லாம் மஞ்சத் துணிய சுத்தி பூ பொட்டு வச்சிருந்த வரைக்கும் ஒரு பயலும் மரத்த வெட்டாமத்தான் இருந்தான். என்றைக்கு இதெல்லாம் மூட நம்பிக்கைன்னு கூவ ஆரம்பிச்சானோ அன்றைக்கே இருக்குற மரத்த பூராத்தையும் வெட்ட ஆரம்பிச்சிட்டன்.*

*2. நாங்க ஆல மரத்துக்கு கீழேயும், அரச மரத்துக்கு கீழேயும் பிள்ளையார வச்சி வழிபட்டுகிட்டு இருக்கும் போதெல்லாம் மனுச மக்க சுத்தமான காத்த சுவாசிச்சிட்டு இருந்தான். இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு என்றைக்கு பினாத்த ஆரம்பிச்சானோ அன்றைக்கே சுத்தமான காத்த தேடி ஓடிட்டு இருக்கான்.*

*3. நாங்க விளையுற நிலத்த சாமியா நினைச்சு பூஜை பண்ணிட்டு இருந்தப்போ மனுஷ மக்க சுத்தமான இயற்கையான சாப்பாட்ட சாபிட்டுட்டு ஆரோக்கியமா இருந்தான். இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு என்றைக்கு பொலம்ப ஆரம்பிச்சானோ அன்றைக்கே இரசாயன சாப்பாட சாப்பிட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிட்டு இருக்கான்.*

*4. நாங்க வீட்டுக்கு முன்னாடி கோலம் போடுறப்பவும், சூடம் ஏத்துறப்பவும், சாணியால வாச தொளிக்குறப்பவும், விளக்கு ஏத்துறப்பவும் இருந்த நோய் நொடியில்லாத வாழ்க்கை,  இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு இவன் நினைக்க ஆரம்பிச்ச உடனே எதிர்ப்பு சக்தி குறைச்சு துவண்டு போயிட்டான்.*

*5. நாங்கெல்லாம் பய பக்தியா சாமி கும்பிடுறவரைக்கும் ஒரு முதியோர் இல்லமும் இல்லாமல் இருந்தது, மனுஷ மக்களும் நீதி நேர்மையோடு வாழ்ந்து வந்தனர். இதையெல்லாம் என்றைக்கு மூட நம்பிக்கைன்னு நாத்திகம் பேசினானோ அன்றைக்கு பெத்த அப்பன் ஆத்தால முதியோர் இல்லத்துல கொண்டு போய் தள்ளிட்டான்.*

*இதெல்லாம் சில தகவல்கள் தான்....*

*இன்னும் சொன்னா எலவு வீடு தோத்துடும்.....*

*இனிமேலாவது போலிபகுத்தறிவு* *கொள்கையைவிட்டுபுட்டு திருந்த பாருங்கள்.*

*நமது முன்னோர்கள் சொன்னதை செய்யுங்கள்*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை*
*திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*
   
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*   

                         *அன்பான இனிய நற்காலைப்பொழுது வணக்கம் நட்பே*

*வாழ்க வளமுடன்*


Wednesday, April 26, 2017

கலியுகத்தில் ஐய்யங்கார் மற்றும் ஐயர்

நானும் என் ஜோதிடம் பார்க்கும் நண்பர்கள் பேசி கொண்டு இருந்தோம். அதில் குறிப்பாக நீங்கள் பிராமணர்கள் என்றால், உங்களுக்கு கொஞ்சம் தைரியம் இருந்தால் மட்டுமே மேலும் படிக்கவும்.
1. நீங்கள் பிறந்த வருடம் 1977 முதல் 1982 வரையா?
2. நீங்கள் 2006 அல்லது 2007 வருடத்தில் திருமணம் செய்து கொண்டாவரா?

இதில் இரண்டுமே ஆம் என்றால், மனதை இன்னும் கொஞ்சம் தைரியம் வைத்து படிக்கவும்

இன்னும் 30 வருடங்களில் ஐயர் மற்றும் ஐய்யங்கார் என்ற பிரிவு உள்ள பிராமணர்கள் இனி உலகில் இருக்காது.

காரணங்கள் :-
1. இந்த வயதில் உள்ள ஆண்களுக்கு திருமணம் இது வரை நடக்கவில்லை
2. அப்படியே நடந்து இருந்தாலும் பலர் இந்தியாவில் விட்டு வெளி நாட்டில் குடியேறி விட்டார்கள்.
3. அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வேறு மதம் அல்லது சாதியில் திருமணம் நடந்து, பிராமணர்கள் என்ற தகுதி இழப்பார்கள்
4. திருமணம் 2006 - 2007 வருடத்தில் திருமணம் செய்து கொண்டாவரா இருந்தால் - 100 க்கு 90 சதவீதம் ஏதாவது ஒன்று நடந்து இருக்க வேண்டும்
4.1 அவர்கள் மன முறிவு நடந்து இருக்கும்
4.2 கணவனோ அல்லது மனைவி இறந்து விட்டதாக இருக்க வேண்டும்
4.3 இல்லை என்றால் புத்திர பாக்கியம் அதாவது குழந்தைகள் பிறந்து இருக்காது.
5. அதனால் ஒரு சந்ததியினர் அழிந்து வருகிறது.
6. 100 க்கு 80 சதவீத பிராமண பெண்கள் மற்ற மதம் சார்ந்த அல்லது சாதியை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டனர்
7. பல பெண்கள் எதிர்பார்ப்பு அதிகமாகி பிராமணர்கள் தவிர்த்து மற்ற சாதி மற்றும் மதங்கள் சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.
8. 1-2% சதவீதம் மீதமுள்ள மட்டுமே உள்ள இந்த பிராமணர்கள் அழிந்து விடுவார்கள்.
9. இந்த வருடங்கள் பிறந்தவர் மிகவும் பாவம் செய்தவர்கள் மற்றும் சபிக்கப்பட்டவர்கள்
10. கடவுள் இவர்களை சரியாக வாழ விடவில்லை.
11. மற்றவர்களை விட பல அவமானங்கள், துரோகங்கள் இவர்களுக்கு தந்து கொண்டு இருக்கிறது வாழ்க்கை
12. மரணமும் தராமல், வெற்றி தராமல் இவர்கள் வாழ்க்கை இப்போது வாழ்ந்து வருகின்றனர்

இனி மொத்தமா பிராமணர்கள் அழித்து போவார்கள் . ஒரு இனம் மொத்தமாக 90% அழிந்து விட்டது. இன்னும் சில நாட்களில் மீதியும் அழிந்து விடும்.

நன்றி,

Saturday, April 15, 2017

இன்றைய நிலைமை

இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..​

ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....


மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.

ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

அத்தருணத்தில் ரயில் வருகிறது....

தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....

உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....

நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?

இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...
ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?

​ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..​

ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....

உண்மை தான் என்றோம்...

​இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.​

​ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது​

​ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது​

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...

​"Fault makers are majority, even they are protected in most of the situations"​

​இன்றைய நிலை....​

​"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...​

​தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"​

படித்ததில் பிடித்ததால் பகிர்கிறேன்...


Grasshopper and Ant

Ant and Grasshopper - Indian Version of story - too good and fact(Very interesting  and worth sharing) 😜😜😜

Original Story:

The Ant works hard in the withering heat all summer building its house and
laying up supplies for the winter. The Grasshopper thinks the Ant is a fool
and laughs dances plays the summer away. Come winter, the Ant is warm and well fed. The Grasshopper has no food or shelter so he dies out in the cold.
       ..........................

Indian Version:

The Ant works hard in the withering heat all summer building its house and
laying up supplies for the winter. The Grasshopper thinks the Ant's a fool and laughs dances plays the summer away.

Come winter, the shivering Grasshopper calls a press conference and demands
to know why the Ant should be allowed to be warm and well fed while others are cold and starving.

NDTV, Times Now, CNN IBN, BBC, CNN , Asianet show up to provide pictures of the shivering Grasshopper
next to a video of the Ant in his comfortable home with a table filled with food.

The World is stunned by the sharp contrast.

How can this be that this poor Grasshopper is allowed to suffer so?

Arundhati Roy stages a demonstration in front of the Ant's house.

Medha Patkar goes on a fast along with other Grasshoppers demanding that Grasshoppers be relocated to warmer climates during winter .

Mayawati states this as 'injustice' done on Minorities.

The Internet is flooded with online petitions seeking support to the Grasshopper

CPM in Kerala immediately passes a law preventing Ants from working hard in the heat so as to bring about equality of poverty among Ants and
Grasshoppers.

Railway minister allocates one free coach to Grasshoppers on all Indian Railway Trains, aptly named as the 'Grasshopper Rath'.

Finally, the Judicial Committee drafts the 'Prevention of Terrorism Against Grasshoppers Act'[POTAGA] , with effect from the beginning of the winter..

Education minister makes 'Special Reservation' for Grasshoppers in Educational
Institutions in Government Services.

The Ant is fined for failing to comply with POTAGA and having nothing left to pay his retroactive taxes, it's home is confiscated by Government
and handed over to the Grasshopper in a ceremony covered by NDTV, Times Now, CNN IBN, BBC, CNN.

Arundhati Roy calls it 'A Triumph of Justice'.

Railway minister calls it 'Socialistic Justice'.

CPM calls it 'Revolutionary Resurgence of Downtrodden'

.
.
.
.

Many years later...

The Ant has since migrated to the US and set up a multi-billion dollar company in Silicon Valley ,

100s of Grasshoppers still die of starvation despite reservation somewhere in India ,

....AND

As a result of losing lot of hard working Ants and feeding the grasshoppers, India is still a developing country...!!

P.S.: I have no idea whose creative mind this has come out from, but this piece is awesome.  Your sharing with other groups would be appreciated.


Tuesday, April 11, 2017

மனதை தொட்ட கதை

😇😇😇

*"ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க மட்டுமே  படகு ஒன்று  இருக்கிறது.*

*மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார்.*

*கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக....*
*இந்த இடத்தில் என்ன சொல்லியிரிப்பார்???"*

*என்று மாணவர்களை நோக்கி இந்த கதையைக் கூறிய ஆசிரியை கேட்டார்.*

*எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....*

*"ஏம்பா நீ சைலண்டா இருக்க......"*

*'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'*

*"எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, உனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"*

*'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'*

*பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.*

*தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது.*

*தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது.*

*கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.*

*' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.*

*கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:*

*'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாதுக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல நம்மால் புரிஞ்சிக்க இயலாம போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.'*

*'நாம சாப்பிட  ரெஸ்டாரெண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்' னு  அர்த்தம்.*

*'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட  உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம்.*

*'நம்ம கண்டுக்காம விட்டாலும்  நமக்கு போன், மெஸேஜ் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்க மனசில இருக்கோம்னு அர்த்தம்'.*

*பின்னொரு காலத்தில நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,*
*'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'*

*ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்களை  நாம கழிச்சிருக்கோம்' னு...*

*#வாழ்க்கை #குறுகியது, ஆனா #அழகானது... 😊*


Wednesday, March 29, 2017

கணவன் மனைவி

_*அவனும் நானும்*_
🎎🎉🎎🎊🎎🎍🎎🔥🎎
ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம். கணவனை உ|ள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ உலக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவள் ஒருவர், மனைவியை அணுகி," மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதீர், ஏன் உன் கணவனைகடிந்து கொண்டீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?" எனக் கேட்டார்.

"ஒன்னுமில்லை ஆண்டி, சும்மாதான். இது  என் கணவரது தங்கையின் திருமணம். நானும்கூட வந்து  நிற்கணுமாம், எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கணுமாம்.
வீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை. இதிலே என்னைய வேறு கூப்பிடுகிறார். பெண் என்றால் அடிமையா என்ன? கணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு ?
எனக்கே அசதியா இருக்கு. இந்த ஆம்பளைங்கன இப்படிதான் ஆண்டி தன்மானம் இல்லாதவர்கள்். சும்மா கடுப்பேத்திகிட்டு".  முதியவள் சிறு புன்னகையோடு, " மகளே முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவனோடுதான் போவேன். ்.ஆனா இப்ப அவங்க இறந்து 8 மாசமாச்சி.

எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு. ரெண்டு பேருமே ஆசிரியர்கள். பணி ஓய்வுக்குப் பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம். எங்களோட 3 பிள்ளைங்களும், கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே, நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம். என் கணவனுக்கு துர்திஷ்டவசமா   இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி. தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்.

இப்ப அவங்க இல்லை, *நான் ரொம்ப தனிமையாக உணர்கிறேன்.* என் பகல்கள் ரொம்ப நீளமாயிச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாச்சு. அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு. அவங்க சாப்பிட்டு முடிக்காத அந்த மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது.

அவங்க handphone நம்பர் இருக்கு, ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க, whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க... முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்... இப்ப நான்
அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்... சமையலறைக்குத் தனியா போறேன், சமையலுன்னு பேர்ல எதையோ பண்றேன், வாய்க்கு ருசியா சமைச்சு பகிரஅவங்க இல்லை... கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை...

விழியோரம் நீர் தேங்க, அதான் மகளே, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும், அதிகமாக போற்றணும். கணவனின் வெற்றியோ தோல்வியோ, பெருமையோ அவமானமோ மனைவிக்கு அனைத்திலும் சம பங்கு உண்டு. தன் மனைவி தன் உடன் தோளோடு தோள் கொடுத்து நிற்காத எந்த கணவனுக்கும் ஏற்படும் அவமானம் தலை குனிவு வேறெந்த அவமானத்தை விட அவனை அதிகம் காயப்படுத்தும். வேதனை படுத்தும்.
எங்கு போனாலும் என் கணவர் முன்னே சென்று எனக்கு இடம் பிடித்து தருவார்.. பஸ் இல் ஏறும் போது ,விழாக்களில் விருந்துகளில் எனக்கு முன்பே ஓடி சென்று எனக்கு இடம் பிடித்து இல்லாவிட்டால் ஏதாவது எனக்கு வசதியாக ஏற்பாடு பண்ணி தருவார்.
பிரயாணம் செய்யும் போது நான் அசந்து தூங்கி விடுவேன். அவரோ ஒரு நிமிடம் கூட கண் அசர மாட்டார். பல முறை 8 மணி நேரம் 12 மணி நேரம் அவசர பயணத்தின் போது பஸ்ஸில் இடம் கிடைக்காமல் என்னை மட்டும் உட்கார வைத்து பாதுகாப்பிற்காக பக்கத்திலேயே கம்பியை பிடித்து நின்று வந்திருக்கிறார்.

இன்னிக்குத் தினமும் என் கணவனின் கல்லறைக்குப் போறேன். எனக்காக எல்லாத்தையும் தயார் பண்ண நீ முன்னுக்கே போயிட்டியாப்பா? இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.

சரி மகளே, நான் வரேன் என்று புறப்பட்ட முதியவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த இளம் நவ உலக சமத்துவ மனைவி்.
என்ன நினைத்தாளோ மண்டப திற்கு உள் சென்று தன் கணவனை தேட ஆரம்பித்தாள்.

ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாவில்லை என கணவனும், நம் கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாவில்லை என மனைவியும் எண்ணக்கூடாது.
புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே, hi sir how r u? Nice to meet u என்கிறோம். இடையில் இரும்புகிறோம், தும்புகிறோம் I'm sorry sir என்கிறோம். பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம். அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும். அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது. ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்?

*வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற* கணவனை மனைவி மதிக்கிறாளா? இல்லை பதில் 100 க்கு 95சதவீதம், இல்லைதான். கணவனின் கரிசனையை, திறமைகளை பாராட்டுறதுமில்லை,* அசதியாக வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட, ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் *உங்களை ரொம்ப மிஸ் பண்ணேங்கனு* மனைவியும் சொல்றதில்லை.

இதெல்லாம் சொல்லணும். அப்படி *ஒருத்தர் உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிச்சா வாழ்க்கை இனிக்கும்.*

நல்ல பதிவு🙏🏻


கணவன் மனைவி

_*அவனும் நானும்*_
🎎🎉🎎🎊🎎🎍🎎🔥🎎
ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம். கணவனை உ|ள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ உலக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவள் ஒருவர், மனைவியை அணுகி," மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதீர், ஏன் உன் கணவனைகடிந்து கொண்டீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?" எனக் கேட்டார்.

"ஒன்னுமில்லை ஆண்டி, சும்மாதான். இது  என் கணவரது தங்கையின் திருமணம். நானும்கூட வந்து  நிற்கணுமாம், எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கணுமாம்.
வீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை. இதிலே என்னைய வேறு கூப்பிடுகிறார். பெண் என்றால் அடிமையா என்ன? கணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு ?
எனக்கே அசதியா இருக்கு. இந்த ஆம்பளைங்கன இப்படிதான் ஆண்டி தன்மானம் இல்லாதவர்கள்். சும்மா கடுப்பேத்திகிட்டு".  முதியவள் சிறு புன்னகையோடு, " மகளே முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவனோடுதான் போவேன். ்.ஆனா இப்ப அவங்க இறந்து 8 மாசமாச்சி.

எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு. ரெண்டு பேருமே ஆசிரியர்கள். பணி ஓய்வுக்குப் பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம். எங்களோட 3 பிள்ளைங்களும், கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே, நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம். என் கணவனுக்கு துர்திஷ்டவசமா   இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி. தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்.

இப்ப அவங்க இல்லை, *நான் ரொம்ப தனிமையாக உணர்கிறேன்.* என் பகல்கள் ரொம்ப நீளமாயிச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாச்சு. அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு. அவங்க சாப்பிட்டு முடிக்காத அந்த மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது.

அவங்க handphone நம்பர் இருக்கு, ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க, whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க... முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்... இப்ப நான்
அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்... சமையலறைக்குத் தனியா போறேன், சமையலுன்னு பேர்ல எதையோ பண்றேன், வாய்க்கு ருசியா சமைச்சு பகிரஅவங்க இல்லை... கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை...

விழியோரம் நீர் தேங்க, அதான் மகளே, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும், அதிகமாக போற்றணும். கணவனின் வெற்றியோ தோல்வியோ, பெருமையோ அவமானமோ மனைவிக்கு அனைத்திலும் சம பங்கு உண்டு. தன் மனைவி தன் உடன் தோளோடு தோள் கொடுத்து நிற்காத எந்த கணவனுக்கும் ஏற்படும் அவமானம் தலை குனிவு வேறெந்த அவமானத்தை விட அவனை அதிகம் காயப்படுத்தும். வேதனை படுத்தும்.
எங்கு போனாலும் என் கணவர் முன்னே சென்று எனக்கு இடம் பிடித்து தருவார்.. பஸ் இல் ஏறும் போது ,விழாக்களில் விருந்துகளில் எனக்கு முன்பே ஓடி சென்று எனக்கு இடம் பிடித்து இல்லாவிட்டால் ஏதாவது எனக்கு வசதியாக ஏற்பாடு பண்ணி தருவார்.
பிரயாணம் செய்யும் போது நான் அசந்து தூங்கி விடுவேன். அவரோ ஒரு நிமிடம் கூட கண் அசர மாட்டார். பல முறை 8 மணி நேரம் 12 மணி நேரம் அவசர பயணத்தின் போது பஸ்ஸில் இடம் கிடைக்காமல் என்னை மட்டும் உட்கார வைத்து பாதுகாப்பிற்காக பக்கத்திலேயே கம்பியை பிடித்து நின்று வந்திருக்கிறார்.

இன்னிக்குத் தினமும் என் கணவனின் கல்லறைக்குப் போறேன். எனக்காக எல்லாத்தையும் தயார் பண்ண நீ முன்னுக்கே போயிட்டியாப்பா? இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.

சரி மகளே, நான் வரேன் என்று புறப்பட்ட முதியவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த இளம் நவ உலக சமத்துவ மனைவி்.
என்ன நினைத்தாளோ மண்டப திற்கு உள் சென்று தன் கணவனை தேட ஆரம்பித்தாள்.

ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாவில்லை என கணவனும், நம் கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாவில்லை என மனைவியும் எண்ணக்கூடாது.
புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே, hi sir how r u? Nice to meet u என்கிறோம். இடையில் இரும்புகிறோம், தும்புகிறோம் I'm sorry sir என்கிறோம். பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம். அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும். அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது. ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்?

*வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற* கணவனை மனைவி மதிக்கிறாளா? இல்லை பதில் 100 க்கு 95சதவீதம், இல்லைதான். கணவனின் கரிசனையை, திறமைகளை பாராட்டுறதுமில்லை,* அசதியாக வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட, ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் *உங்களை ரொம்ப மிஸ் பண்ணேங்கனு* மனைவியும் சொல்றதில்லை.

இதெல்லாம் சொல்லணும். அப்படி *ஒருத்தர் உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிச்சா வாழ்க்கை இனிக்கும்.*

நல்ல பதிவு🙏🏻


How to Get files from the directory - One more method

 import os import openpyxl # Specify the target folder folder_path = "C:/Your/Target/Folder"  # Replace with the actual path # Cre...